குறுந்தொகை: பாடல் 128
குறுந்தொகை 128 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
குண கடல் திரையது பறை தபு நாரை
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச்
சேயள் அரியோட் படர்தி;
நோயை நெஞ்சே! நோய்ப் பாலோயே.
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது; உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉம் ஆம்
பரணர்
குணகடல் - கீழ்த்திசைக் கண் உள்ள கடல்
திரை - கடலுக்கு ஆகுபெயர்
பறை - சிறகு ( பறத்தல் தொழிலுமாம்)
தபு - இழத்தல்
திண்தேர் - வலிமையான தேர்
பொறையன் - சேர மன்னன்
தொண்டி - துறைமுகம்
அயிரை - ஒருவகை மீன்
ஆர் இரை - உண்ணும் இரை
சேயள் - தூரத்தில் உள்ள வள்
அரியோள் - கிடைத்ததற்கு அரியவள்
படர்தி - படருதல்,எண்ணுதல்
நன்றி
