குறுந்தொகை: பாடல் 129
குறுந்தொகை 129 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப!
புலவர் தோழ! கேளாய் அத்தை;
மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப்
பசு வெண் திங்கள் தோன்றியாங்குக்
கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல்
புதுக் கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.
தலைமகன் பாங்கற்கு உரைத்தது
கோப்பெருஞ்சோழன்
எலுவ(ன்) - நண்ப(ன்)
ஏமம் - பாதுகாப்பு, நலன்(ஏமம் ஏம் எனக் குறைந்தது)
அத்தை - அசை(உறவு முறைப் பெயர் அல்ல)
மாக் கடல் - கரிய கடல்
எண் நாள் - உவாவி லிருந்து எட்டாம் நாள்
பசுமை -இளமை,இளைய நிலா
கருப்பு - கூந்தல்
பிணித்தன்று - பிணித்தது
