குறுந்தொகை: பாடல் 130
குறுந்தொகை 130 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்;
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்;
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்,
கெடுநரும் உளரோ? நம் காதலோரே.
பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. ‘நீ அவர் பிரிந்தார் என்று ஆற்றாயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூது விட்டுக்கொணர்வேன்; நின் ஆற்றாமை நீங்குக!’ எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.
தோழி தூது விடுவாளாகத் தலைமகள் தனது ஆற்றாமையால் கூறியதூஉம் ஆம்.
வெள்ளி வீதியார்
தொடுதல் - தோண்டுதல்
புகுதல் - மறைதல்
விலங்குதல் - குறுக்கிடுதல்,தடுத்தல்
முந்நீர் - கடல்(ஆற்று நீர்+ஊற்று நீர்+மழை நீர்)
கால் - காற்று
நன்றி
