குறுந்தொகை: பாடல் 131

குறுந்தொகை 131 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்

பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே

நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,

ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து

ஓர் ஏர் உழவன் போல,

பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே,

வினைமுற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது.

ஓரேருழவனார்

ஆடு அமை - அசைகின்ற மூங்கில்

வனப்பு - அழகு

(பணைத்தல் - பருத்தல்)

பணைத்தோள் - பருத்த தோள்

அமர்க்கண்ணி - போர் செய்யும் கண்கள்

ஆர் இடை - கடத்தற்கரிய இடைவழி

விதுப்பு - விரைவு, சுறுசுறுப்பு, வேட்கை, வருந்துதல்

நோகு -நோவேன்

நன்றி

http://tamil concordance.co.in