குறுந்தொகை: பாடல் 136
குறுந்தொகை 136 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
''காமம் காமம்'' என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.
தலைமகன் பாங்கற்கு உரைத்தது
மிளைப்பெருங் கந்தன்
பிணி - நோய்
கடுத்தல் - மிகுதல்
தணிதல் - குறைதல்
குளகு - இலை தழை
பாணி - காலம்
காணுநர் - காமம் தோன்றுவதற்கு ஏற்றவர்
நன்றி: http://tamil concordance.in
