குறுந்தொகை: பாடல் 140
குறுந்தொகை 140 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
வேதின வெரிநின் ஓதி முது போத்து,
ஆறு செல் மாக்கள் புள் கொள, பொருந்தும்
சுரனே சென்றனர், காதலர்; உரன் அழிந்து,
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம்
யாங்கு அறிந்தன்று இவ் அழுங்கல் ஊரே?
பொருள்வயிற் பிரிந்த இடத்து, ''நீ ஆற்றுகின்றிலை'' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
அள்ளூர் நன்முல்லையார்
வேதினம் - ஈர்வாள் (ரம்பம்)
ஓதி - ஓந்தி (இடைக்குறை)
போத்து - ஆண் ஓந்தி
ஆறு செல் மாக்கள் - வழிப் போவார்
புள் - நிமித்தம்
சுரன் - பாலை நிலம்
உரன் - வலி( தனித்து உறைதல்)
எவ்வம் - துன்பம்
அழுங்கல் ஊர் - இரங்குதல் உடைய ஊர்
(ஊர் - ஆகுபெயர்)
