குறுந்தொகை: பாடல் 142
குறுந்தொகை 142 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை
தான் அறிந்தன்றோ இலளே பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து, என்
உள்ளம், பின்னும், தன் உழையதுவே!
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது;
தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம்.
கபிலர்
சுனைப்பூ - நீலம் முதலிய மலர்கள்
குற்று - பறித்து
தொடலை - மாலை
தைஇ - புனைந்து
புனக்கிளி - புனத்தில் படியும் கிளி
கடிதல் - ஓட்டுதல்
பூங்கண் - தாமரைப்பூ
பேதை - தலைவி
பள்ளியானை - படுக்கை கொண்ட யானை
