குறுந்தொகை: பாடல் 149
குறுந்தொகை 149 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
அளிதோ தானே நாணே நம்மொடு
நனி நீடு உழந்தன்று மன்னே; இனியே,
வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை
தீம் புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு,
தாங்கும் அளவைத் தாங்கி,
காமம் நெரிதரக் கைந் நில்லாதே.
உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
வெள்ளிவீதியார்
உழந்தன்று - வருந்தியது
வான் பூ - வெண் பூ
ஓங்கு - உயற்சி
வீந்து - விழுந்து
உக்காஅங்கு - உக்கு, உகுதல்,கரைதல்
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து(குறள். 1163)
காமக் கணிச்சி உடைக்கும் நிறைஎன்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு(குறள்.1251)
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே/
யானோ பொறேன்இவ் இரண்டு(குறள். 1247)
