குறுந்தொகை: பாடல் 150

குறுந்தொகை 150 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி

வான மீனின் வயின்வயின் இமைக்கும்

ஓங்கு மலைநாடன் சாந்து புலர் அகலம்

உள்ளின், உள் நோய் மல்கும்;

புல்லின், மாய்வது எவன்கொல்? அன்னாய்!

இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைமகள் கூறியது.

மாடலூர் கிழார்

சேணோன் - உயரத்தில் இருப்பவன், பரண்மிசை இருப்பவன்

மாட்டுதல் - கொளுத்துதல்

ஞெகிழி - கொள்ளி

வானமீன் - விண்மீன்

வயின்வயின் - இடந்தோறும் இடந்தோறும்

இமைத்தல் - ஒளி வீசுதல்

சாந்து - சந்தனம்

அகலம் - மார்பு

நன்றி

http://tamil concordance.in