குறுந்தொகை: பாடல் 157
குறுந்தொகை 157 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
''குக்கூ'' என்றது கோழி; அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.
பூப்பு எய்திய தலைமகள் உரைத்தது.
அள்ளூர் நன்முல்லையார்
துட்கு - அச்சம்
ஆல் - அசை
(வைகறைக்கு வாள் உவமை)
