குறுந்தொகை: பாடல் 158
குறுந்தொகை 158 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ் சூல் மா மழை!
ஆர் அளி இலையோ நீயே? பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை;
துணை இலர், அளியர், பெண்டிர்; இஃது எவனே?
தலைமகன் இரவுக்குறி வந்துழி, அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
ஒளவையார்
கடுவிசை - வேகம்,விரைவு
உரும் - இடி
கழறுகுரல் - வன் குரல்
அளைஇ - கலந்து
காமம் - நிறைவு
மாமழை - பெரிய மழை
ஆர் அளி - பெருமைக்குப் பொருந்திய அருள்
பேரிசை இமயம் - தலை சிறந்த மலை
பெண்டிர் - தலைவி
