குறுந்தொகை: பாடல் 159

குறுந்தொகை 159 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

''தழை அணி அல்குல் தாங்கல் செல்லா

நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக,

அம் மெல் ஆகம் நிறைய வீங்கிக்

கொம்மை வரி முலை செப்புடன் எதிரின;

யாங்கு ஆகுவள்கொல் பூங்குழை?'' என்னும்

அவல நெஞ்சமொடு உசாவாக்

கவலை மாக்கட்டு இப் பேதை ஊரே.

தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தது;

உயிர் செல வேற்று வரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூஉம் ஆம்.

வடம வண்ணக்கன் பேரிசாத்தன்

தழை அணி - தழை உடை

நுழை - நுணுகிய,சிறிய

எவ்வம் - துன்பம்

அம் மெல் ஆகம் - அழகும் மென்மையும் உடைய மார்பு

கொம்மை - இளமை, திரட்சி, பருமை

வரி - தேமல், தொய்யில்

எதிரின - மாறுபட்டன

பூங்குழை - அன்மொழித்தொகை

அவலம் - துன்பம்

உசாவா- வினை எச்சம்

(உசாவி என்னும் பொருட்டு)

நன்றி : http://tamil concordance.in