குறுந்தொகை: பாடல் 161
குறுந்தொகை 161 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
பொழுதும் எல்லின்று; பெயலும் ஓவாது,
கழுது கண் பனிப்ப வீசும்; அதன்தலைப்
புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி,
''அன்னா!'' என்னும், அன்னையும்: அன்னோ!
என் மலைந்தனன்கொல் தானே தன் மலை
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனே?
இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்புமிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
நக்கீரர்
எல்(பெயர்ச்சொல்)-சூரியன், இலங்குவது, ஒளி விடுவது
எல்-இரவு, எல்லின்று- இருண்டது, இருட்டிவிட்டது (இருளுக்கு ஆகுபெயர்) ('எல்' என்னும் பெயரடியாய் எல்லின்று என்னும் வினைச்சொல் பிறந்தது)
பெயல் - மழை
ஓவாது - ஒழிவின்றி
கழுது - பேய்
கண்பனிப்ப - சிம்புளித்து நடுங்க
புலிப்பல் தாலி - புலிப்பல் கோர்த்த , சிறுவர் சிறுமியர் அணியும் அணிகலன்
புதல்வன் - தலைவியின் தம்பி
புல்லி(வினை.) - தழுவி
அன்னா - விளி
அன்னோ - இரக்கக் குறிப்பு
மலைதல் - வியத்தல்
மாரி யானை - மழையில் நனைந்த யானை
புலிப் பல் தாலி புதல்வன் புல்லி(குறுந்.161:3)
பொன் உடைத் தாலி என் மகன் (அகம்.54:18)
தாலி களைந்தன்றும் இவனே(புறம்.77:7)
புலிப் பல் தாலி புன்தலைச் சிறார் (புறம்.374:9)
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி(அகம்.54:18)
பொன்னொடு/ புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி(அகம்.7:17-18)
வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம்(ஐங்.166:2)
நன்றி - http://tamil concordance.in
