குறுந்தொகை: பாடல் 162
குறுந்தொகை 162 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப்
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை
முல்லை! வாழியோ, முல்லை! நீ நின்
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை;
நகுவை போலக் காட்டல்
தகுமோ, மற்று இது தமியோர் மாட்டே?
வினை முற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பனாய் உரைத்தது.
கருவூர்ப் பவுத்திரன்
புறந்தருதல் - பாதுகாத்தல்
வியன் புலம் - அகன்ற புலம்(நிலம்)
முல்லை - விளி
முறுவல் - புன்னகை
காட்டல் - காட்டாதே
தமியோர் - பிரிந்திருப்போர்,தனித்திருப்போர்
மற்று,ஏ - அசை
நன்றி - http://tamil concordance.in
