குறுந்தொகை: பாடல் 166
குறுந்தொகை 166 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்,
ஊரோ நன்றுமன், மரந்தை;
ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே.
காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது.
கூடலூர் கிழார்
பறை - சிறகு
நிரை - வரிசை
மரந்தை - கடற்கரைப் பட்டினம்
புலம்பு - தனிமை
நன்றி - http://tamil concordance.in
