குறுந்தொகை: பாடல் 168

குறுந்தொகை 168 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை

இரும் பனம் பசுங் குடை பலவுடன் பொதிந்து

பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன

நறுந் தண்ணியளே, நல் மா மேனி;

புனற் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள்

மணத்தலும் தணத்தலும் இலமே;

பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.

பொருள் வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது

சிறைக்குடி ஆந்தையார்

மாரிப் பித்திகம் - பிச்சி

கொழு முகை - கொழுத்த அரும்பு

புணை- தெப்பம்

சாய் இறை - வளைந்த சந்து

பணைத் தோள் - மூங்கில் போன்ற தோள்