குறுந்தொகை: பாடல் 169

குறுந்தொகை 169 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின்

தெற்றென இறீஇயரோ ஐய! மற்று யாம்

நும்மொடு நக்க வால் வெள் எயிறே:

பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல

எமக்கும் பெரும் புலவு ஆகி,

நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே.

கற்புக் காலத்துத் தெளிவிடை விலங்கியது;

இனித் தோழி வரைவு நீட்டித்தவழி வரைவு கடாயதூஉம் ஆம்.

வெள்ளிவீதியார்

கல் உறு கோடு - மலையைக் குத்திய யானையின் கொம்பு

தெற்றென - விரைவாக

இறுதல் - ஒடிதல், முறிதல், அழிதல், கெடுதல்

வால் வெள் எயிறு - ஒரு பொருட் பன்மொழி

மண்டை - கலம்

இறீஇயர் - அழிக, நீங்குக