குறுந்தொகை: பாடல் 177

குறுந்தொகை 177 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி,

துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே;

மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை

அன்றிலும் பையென நரலும்; இன்று அவர்

வருவர்கொல் வாழி தோழி! நாம் நகப்

புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித்

தணப்பு அருங் காமம் தண்டியோரே?

கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது.

உலோச்சன்

பாடுஅவிதல் - அலை ஒழிந்து முழக்கமின்றிக் கிடத்தல்

கானல் - கடற்கரைப் பரப்பு

புல்லென்று - பொலிவிழந்து

மன்றம் - ஊர்ப் பொதுஇடம், ஊர் அம்பலம்

அம் பெண்ணை - அழகிய பனை

கொல்,வாழி - அசைநிலை

தண்டியோர் - அமையப் பெற்றோர்

நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்/

இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு/

தடவின் ஓங்குசினைக் கட்சி(குறுந்.160:1-3)

நற்றிணை

---------------------

அன்றில்

124:1,152:7,218:11,303:5

அன்றிலும்

335:8

நன்றி - http://tamil concordance.in