குறுந்தொகை: பாடல் 179

குறுந்தொகை 179 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

கல்லென் கானத்துக் கடமா ஆட்டி,

எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன;

செல்லல் ஐஇய! உது எம் ஊரே;

ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த

குவையுடைப் பசுங் கழை தின்ற கய வாய்ப்

பேதை யானை சுவைத்த

கூழை மூங்கிற் குவட்டிடையதுவே.

பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது.

குட்டுவன் கண்ணன்

கல் - ஒலிக்குறிப்பு

கடமா - ஒருவகை விலங்கு (காட்டெருமை)

ஆட்டுதல் - காட்டில் புகுந்து அலைத்துத் துன்புறுத்துதல்

எல் - பொழுது

எல்லின்று - இருண்டது

ஞமலி - நாய்

இளைத்தன - வேட்டையாடி இளைத்தன (சோர்வுற்றன)

உது - உதோ(இடைச்சுட்டு)

வரை - அடுக்கம், மலைப்பக்கம்

கோடு துவையா, கோள் வாய் நாயொடு

காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு(நற்றிணை 276:1 -2)