குறுந்தொகை: பாடல் 182

குறுந்தொகை 182 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

விழுத்தலைப் பெண்ணை விளையல் மா மடல்

மணி அணி பெருந் தார் மரபிற் பூட்டி,

வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி,

ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி,

தெருவின் இயலவும் தருவதுகொல்லோ-

கலிழ் கவின் அசைநடைப் பேதை

மெலிந்திலள்; நாம் விடற்கு அமைந்த தூதே?

தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைத்தது.

மடல் பாடிய மாதங்கீரன்

விழுந்தலை - கொழுத்த தலை

மா மடல் - பெரிய மடல்

மணி - மடல் மா கழுத்தில் கட்டும் மணி

பெருந்தார் - ஆவிரம்பூ எருக்கம் பூ மாலை

கலிழ் கவின் - அழகு மிக்க

கொல் ,ஓ - அசைகள்

___________________________________________________________________________

தமிழிலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள் - ஒரு வரலாற்றுப் பார்வை

(திருத்திய பதிப்பு) சென்னை: மணிவாசகர் பதிப்பகம்,2023.