குறுந்தொகை: பாடல் 186

குறுந்தொகை 186 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த

கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி

எயிறு என முகையும் நாடற்குத்

துயில் துறந்தனவால் தோழி! எம் கண்ணே.

பருவ வரவின், ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

ஒக்கூர் மாசாத்தி

ஆர்கலி - ஆரவாரம்

ஏறு - இடி

கொல்லை - புன்செய்