குறுந்தொகை: பாடல் 188

குறுந்தொகை 188 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

முகை முற்றினவே முல்லை; முல்லையொடு

தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்

வால் இழை நெகிழ்த்தோர் வாரார்

மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே.

பருவம் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது.

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

முகை - அரும்பு

முற்றுதல் - அன்று மாலை மலரும் செவ்வி அடைதல்

தகை - வனப்பு,அழகு

வாலிழை - அன்மொழித்தொகை(தலைவி)

மாண் - அழகு