குறுந்தொகை: பாடல் 191
குறுந்தொகை 191 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?
நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம்
தாம் புணர்ந்தமையின், பிரிந்தோர் உள்ளத்
தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின், ''போதின்
பொம்மல் ஓதியும் புனையல்;
எம்மும் தொடாஅல்'' என்குவெம் மன்னே.
பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
நோன்சினை - வலிய கொம்பு
ஏதிலார் - அயன்மை உடையவர்
பொம்மல் - பொங்குதல்
ஓதி - கூந்தல்
புனையல்,தொடால் - புனையாதே,தொடாதே (முன்னிலை ஒருமை)
எம்மும் - எம்மையும்
என்குவம் - என்போம்
இளமை சென்று தவத் தொல்லஃதே;
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே?(அகம்.6:21-22)
நெறியிரும் கதுப்பொடு பெருந்தோள் நீவி,
செறிவளை நெகிழ, செய்பொருட்கு (குறுந்.190:1-2)
பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி,
தொடிக் கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல்,
அம் தீம் கிளவிக் குறுமகள்
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே!(அகம்.9:22-26)
