குறுந்தொகை: பாடல் 193

குறுந்தொகை 193 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன

இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை

தட்டைப் பறையின் கறங்கும் நாடன்

தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்

மணந்தனன்மன் எம் தோளே;

இன்றும், முல்லை முகை நாறும்மே.

தோழி கடிநகர் புக்கு, ''நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்!'‘ என்றாட்குக் கிழத்தி உரைத்தது.

அரிசில் கிழார்

மட்டம் - தேறல்

மணிக்கலம் - நீலக் குப்பி

இட்டு வாய் - ஒடுங்கிய வாய்

பகுவாய் - பிளவுபட்ட வாய்,தவளையின் வாய்

தேரை - தவளை

தட்டைப்பறை - கிளி கடி கருவி

கறங்குதல் - ஒலித்தல்

தொல்லை - முந்திய,கடந்த, சென்ற

ஆய் கோடு இட்டு (குறுந்.358:2)

தொண்டகச் சிறு பறை/பானாள் யாமத்தும் கறங்கும்(குறுந்.375:4-5)

கள் அடு மகளிர் (பெரும்.339)

அரியல் பெண்டிர்(அகம்.157:1)

சோலைக் கமுகின் சூல் வயிற்றன்ன/நீலப் பைங்குடம் (பெரும்பாண்.381-382)

சங்க இலக்கியத்தில் மனித நேயம் சென்னை : என்.சி.பி.எச்., 2012- முனைவர் த.வசந்தாள்