குறுந்தொகை: பாடல் 194
குறுந்தொகை 194 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
என் எனப்படுங்கொல் தோழி! மின்னு வர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்;
ஏதில கலந்த இரண்டற்கு என்
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே?
பருவ வரவின்கண், ''ஆற்றாளாம்'', எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கோவர்த்தனார்
மின்னு - மின்னி
வான் - முகில்
ஏர்பு - எழுந்து
இரங்கும் - முழங்கும்
அதன் எதிர் - இடி முழக்கத்திற்கு எதிராக
ஏதில - அயன்மை உடையவை, தொடர்பு அற்றவை
ஏங்குதல் - அகவுதல்,ஆரவாரித்தல்
பெரு மலக்கு - பெருந் துன்பம்
