குறுந்தொகை: பாடல் 196

குறுந்தொகை 196 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

வேம்பின் பைங் காய் என் தோழி தரினே,

''தேம் பூங் கட்டி'' என்றனிர்; இனியே,

பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்

தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,

''வெய்ய உவர்க்கும்'' என்றனிர்-

ஐய! அற்றால் அன்பின் பாலே.

வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது.

மிளைக் கந்தன்

பைங்காய் - வேம்பின் காய்

தேம்பூங் கட்டி - கருப்புக் கட்டி

இனியே - இப்பொழுது

வெய்ய - வெப்பம் உடையன

தீம் பெரும் பைஞ் சுனை(அகம்.78:23)

பாரி பரம்பின் பனிச் சுனை போல்(புறம்.337:6)

பாரி பரம்பின் பனிச் சுனைத் தெண்ணீர் (புறம்.176:9)

காலை அரும்பிப் பகல்எல்லாம் போதுஆகி

மாலை மலரும்இந் நோய்.(குறள்.1227)

பாரி பாரி' என்று பல ஏத்தி,

ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்;

பாரி ஒருவனும் அல்லன்;

மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே (புறநானூறு.107)