குறுந்தொகை: பாடல் 198

குறுந்தொகை 198 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்

கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை

மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு,

கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல்

படுகிளி கடிகம் சேறும்; அடுபோர்

எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து

ஆரம் நாறும் மார்பினை,

வாரற்க தில்ல; வருகுவள் யாயே.

தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது.

கபிலர்

யாஅம் - ஒரு வகை மரம்

சுட்ட - எரித்த

இயவு - வழி

முதல் - அடி

பால் - கதிரின் கண் உள்ள பால்

கரிக்குறடு - கொல்லன் உலைக்கண் கரி எடுக்கும் ஒரு கருவி

கோள் - குலை

படுகிளி - வினைத்தொகை

கடிகம் - ஓட்டுவேம்

சேறும் - செல்வேம்

ஆரம் - சந்தனம்

மலையன் - வள்ளல்

தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம்,

கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து,

தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும்

ஒண் தொடி மகளிர் (அகம்.368:1-4)

......................................................கானவர்

கரி புனம் மயக்கிய அகன்கண் கொல்லை,

ஐவனம் வித்தி (புறம்.159:15-17)

முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர்