குறுந்தொகை: பாடல் 200

குறுந்தொகை 200 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்

மீமிசைத் தாஅய், வீசும் வளி கலந்து,

இழிதரும் புனலும்; வாரார் தோழி!

மறந்தோர் மன்ற; மறவாம் நாமே

கால மாரி மாலை மா மலை

இன் இசை உருமினம் முரலும்

முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே.

பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி,

''பருவம் அன்று; வம்பு'' என்ற வழி, தலைமகள் சொல்லியது.

ஒளவையார்

கலுழ் - கலங்கல்

மீமிசை - ஒரு பொருட் பன்மொழி

தாஅய் - பரவி

மன்ற - தேற்றப்பொருள்

கால மாரி - பருவ மழை

உரும் - உருமினம்,இடியை உடையன

முரலும் - முழங்கும்

முன்வரல் - கார் வரும் முன் வருவேன்

ஏமம் - பாதுகாப்பு

ஏகாரம் - பிரிநிலை

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும். (குறள்.1207)