குறுந்தொகை: பாடல் 203

குறுந்தொகை 203 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்;

மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்;

கண்ணின் காண நண்ணுவழி இருந்தும்,

கடவுள் நண்ணிய பாலோர் போல,

ஒரீஇனன் ஒழுகும் என்னைக்குப்

பரியலென்மன் யான், பண்டு ஒரு காலே.

வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

நெடும்பல்லியத்தன்

ஒரீஇ - ஒழுகுதல் , புறக்கணித்து நடத்தல்

என்னை(என்+ ஐ) - தலைவன்

பரியலென் - மனம் வருந்துதல், இரங்குதலை உடையேன்

மன் - கழிந்தது (இடைச்சொல்)