குறுந்தொகை: பாடல் 205

குறுந்தொகை 205 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க

விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு,

பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி,

கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப,

இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்;

யாங்கு அறிந்தன்றுகொல்-தோழி!-என்

தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?

வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

உலோச்சன்

மின்னு - மின்னல்

கருவிய - தொகுதி

தூங்க - பொழிய

விசும்பு ஆடு அன்னம் - வினைத்தொகை

பொலம் படை - பொன்னால் ஆன தட்டு,தேர்த் தட்டு

வெண்தேர் - யானை மருப்பால் செய்த தேர்

இடு மணல் - அலை கொணர்ந்து இட்ட மணல்(வினைத்தொகை)

சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன்

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்

மேனி பசப்பூர் வது(குறள். 1185)

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு(குறள்.1186)