குறுந்தொகை: பாடல் 210
குறுந்தொகை 210 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.
பிரிந்து வந்த தலைமகன், ''நன்கு ஆற்றுவித்தாய்!'' என்றாற்குத் தோழி உரைத்தது
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
கானம் - காடு
அண்டர் - ஆயர்
பல் ஆ - பசுக்கள்
தொண்டி - ஒரு சிறந்த மூதூர்
செல்லல் - துன்பம்
நன்றி: http://tamil concordance.in
