குறுந்தொகை: பாடல் 213
குறுந்தொகை 213 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
நசை நன்கு உடையர்-தோழி!-ஞெரேரெனக்
கவைத் தலை முது கலை காலின் ஒற்றிப்
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந் ததரல்
ஒழியின் உண்டு, அழிவு இல் நெஞ்சின்
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி,
நின்று வெயில் கழிக்கும் என்ப-நம்
இன் துயில் முனிநர் சென்ற ஆறே.
''நம்பெருமான் நம்பொருட்டு இடைநின்று மீள்வான்'' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது.
கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன்
நசை - விருப்பம்
ஞெரேர் - விரைவுக் குறிப்பு
கவைத்தலை - கவர்த்த கொம்புகளை உடைய தலை
முதுகலை - வயது முதிர்ந்த ஆண் மான்
ஒற்றி - உதைத்து
இறைஞ்சிய - வளைத்த
பரூஉ - பருத்த
ததரல் - சிதைந்த மரப் பட்டை
ஒழியின் - எஞ்சியது
மறி - குட்டி
