குறுந்தொகை: பாடல் 216

குறுந்தொகை 216 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

அவரே, கேடு இல் விழுப்பொருள் தருமார், பாசிலை

வாடா வள்ளிஅம் காடு இறந்தோரே;

யானே, தோடு ஆர் எல் வளை ஞெகிழ, நாளும்

பாடு அமை சேக்கையில், படர் கூர்ந்திசினே;

''அன்னள் அளியள்'' என்னாது, மா மழை

இன்னும் பெய்யும்; முழங்கி

மின்னும்-தோழி!-என் இன் உயிர் குறித்தே

பருவ வரவின்கண், ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன்

விழுப்பொருள் - விழுமிய பொருள்

தருமார் - கொணர்தற் பொருட்டு

வள்ளி - கொடி

அம் காடு - அழகிய காடு

தோடு - தொகுதி,நிரல்

எல்வளை - ஒளி வளை

பாடு அமை சேக்கை - அமைந்த படுக்கை

படர் கூர்தல் - நினைவுத் துன்பம் மிகுதல்

சின் - முன்னிலை அசை

சாளரம் பொளித்த கால் போகு பெருவழி/வீதி மருங்கு இயன்ற பூ அணைப் பள்ளி;(மணிமேகலை.4:53-54)

எண்ணெய்/நுரை முகந்தன்ன மென்பூஞ் சேக்கை (புறம். 50:6-7)