குறுந்தொகை: பாடல் 217

குறுந்தொகை 217 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

தினை கிளி கடிதலின், பகலும் ஒல்லும்;

இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல்;

யாங்குச் செய்வாம், எம் இடும்பை நோய்க்கு?'' என

ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து,

ஓங்கு மலைநாடன் உயிர்த்தோன்மன்ற;

ஐதே காமம் யானே;

கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே.

உடன்போக்கு நயப்பத் தோழி தலைமகட்குக் கூறியது.

தங்கால் முடக்கொல்லனார்

ஒல்லும் - பொருந்தும்

ஊறு - இடையூறு

அஞ்சுவல் - அஞ்சுவேன்

யாங்கு - எவ்வாறு

செய்வாம் - செய்தல்

இடும்பை நோய் - இடையறாது துன்பம் செய்யும் காம நோய்

செத்து - கருதி

உயிர்த்தல் - பெரு மூச்செறிதல்

நன்றி: http://tamil concordance.in