குறுந்தொகை: பாடல் 218
குறுந்தொகை 218 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக்
கடனும் பூணாம்; கைந் நூல் யாவாம்;
புள்ளும் ஓராம்; விரிச்சியும் நில்லாம்;
உள்ளலும் உள்ளாம் அன்றே-தோழி!-
உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று
இமைப்பு வரை அமையா நம் வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர்மாட்டே.
பிரிவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கொற்றன்
விடர் - பிளப்பு, வெடிப்பு
முகை - மலை முழைஞ்சு
விறல் - வெற்றி
சூலி - சூலம் ஏந்திய கொற்றவை
கடன் - பலி, வழிபாடு
கைந் நூல் யாத்தல் - நோன்புக் கயிறு/காப்பு நூல் கட்டிக் கொள்ளுதல்
புள் - நல் நிமித்தம்
விரிச்சி - நற் சொல்
இமைப்புவரை - இமைக்கும் அளவுப் பொழுது
வல்லியோர் - வன்மை உடையோர்
