குறுந்தொகை: பாடல் 219

குறுந்தொகை 219 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

பயப்பு என் மேனியதுவே; நயப்பு அவர்

நார் இல் நெஞ்சத்து ஆர் இடையதுவே;

செறிவும் சேண் இகந்தன்றே; அறிவே;

''ஆங்கண் செல்கம் எழுக'' என, ஈங்கே,

வல்லா கூறியிருக்கும்; அள் இலைத்

தடவு நிலைத் தாழைச் சேர்ப்பற்கு

இடம்மன்-தோழி!-''எந் நீரிரோ?'' எனினே.

சிறைப்புறம்.

வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்.

பயப்பு - பசலை

நயப்பு - அன்பு,விருப்பம்

நார் - அன்பு

ஆரிடை - செல்லுதற்கு அரிய இடம்

செறிவு - பொறுமை, அடக்கம்

வல்லா - மாட்டாத, நடக்க இயலாத

தடவு நிலை - பெரிய, பருத்த

இடம்மன் - ஆக்கப்பொருள்

எந் நீரிர் - எத்தன்மையீர்

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்/

நீங்கும்என் மென்தோள் பசப்பு.(குறள்.1265)

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது/

பைந்தொடிப் பேதை நுதல்(குறள்.1238)

நள்ளென் யாமத்து உயவுத் துணை ஆக/

நம்மொடு பசலை நோன்று, தம்மொடு/

தானே சென்ற நலனும்/

நல்கார் கொல்லோ, நாம் நயந்திசினோரே?(அகம்.103:12-15)

நன்றி: http://tamil concordance.in