குறுந்தொகை: பாடல் 221
குறுந்தொகை 221 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
அவரோ வாரார்-முல்லையும் பூத்தன;
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய,
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறு பசு முகையே.
பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது
உறையூர் முது கொற்றன்
பறி - பனை ஓலையால் செய்த தடுக்கு
மறியினம் - குட்டிகளை உடைய ஆட்டினம்
ஒழிய - தங்க
இடை மகன் - ஆட்டு இடையன்
நன்றி: http://tamil concordance.in
