குறுந்தொகை: பாடல் 222

குறுந்தொகை 222 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்;

கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்;

புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்,

ஆண்டும் வருகுவள் போலும்-மாண்ட

மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச்

செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்

துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே.

பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தது.

சிறைக்குடி ஆந்தையார்

புணை - தெப்பம்,மிதவை

மாரி - மாரிக் காலம்

பித்திகம் - பிச்சிப்பூ

வெரிந் - புறம்

துளி - மழைத் துளி

தலைஇய - பெய்த, பரவிய,பெற்ற

தளிர் - துளிர்,கொழுந்து