குறுந்தொகை: பாடல் 223
குறுந்தொகை 223 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
''பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம்'' என்றி; அன்று, இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல;
தழலும் தட்டையும் முறியும் தந்து, ''இவை
ஒத்தன நினக்கு'' எனப் பொய்த்தன கூறி,
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என்னை கொண்டான்; யாம் இன்னமால் இனியே.
வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு. வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி கூறியது.
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகன்
ஆர்கலி - ஆரவாரம்
தில்ல - ஒழியிசைப் பொருள்
என்றி - என்று
தழல் தட்டை - கிளி கடி கருவிகள்
தழல் - கவண்,கல் எறி கருவி
தட்டை - மூங்கிலைப் பிளந்து ஒலி எழும்பும் படி செய்த கருவி / கிளி கடி கருவி
முறி - தழை
ஆய் நலம் - பெண்மை நலம்
என்னை (என் + ஐ) - தலைவன்
இன்னம் - இத்தகையேம்
ஆல் - அசை
இனி - இப்பொழுது
நன்றி: http://tamil concordance.in
