குறுந்தொகை: பாடல் 224
குறுந்தொகை 224 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
கவலை யாத்த அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே-கூவற்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே.
பிரிவிடை ''இறந்துபடும்'' எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது.
கூவன் மைந்தன்
கவலை - கவர்த்த வழி
யாத்த - (யா + அத்த) யா மரங்கள் நிறைந்த
நீளிடை - நீண்ட பாலை நிலம்
எற்றி - நினைந்து
துஞ்சா நோய் - உறக்கமின்மை,விழித்திருத்தல்
கூவல் - கிணறு
குரால் ஆன் - கபிலை நிறப் பசு,அடர் பொன் நிறம் உடைய பசு
உயர்திணை ஊமன் - மாற்றுத் திறனாளி
பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்,(கலித்தொகை 105:13-14)
