குறுந்தொகை: பாடல் 228
குறுந்தொகை 228 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை,
குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,
திரை வந்து பெயரும் என்ப-நத் துறந்து
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்,
நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே.
கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்!'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்
வீழ் -விழுது
ஊழுறு -மலர்கின்ற
குருகு - அன்னம்
உளர்தல் - அலகால் சிறகுகளைக் கோதுதல்
விரிபு - விரிந்து
கானல் - கடல் சார்ந்த சோலை
சிறுகுடி - சிற்றூர்
என்ப - அசைநிலை
நன்றி: http://tamil concordance.in
