குறுந்தொகை: பாடல் 229

குறுந்தொகை 229 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்

புன் தலை ஓரி வாங்குநள் பரியவும்,

காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,

ஏதில் சிறு செரு உறுப மன்னோ!

நல்லை மன்றம்ம பாலே-மெல் இயல்

துணை மலர்ப் பிணையல் அன்ன இவர்

மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.

இடைச் சுரத்துக் கண்டார் தம்முள்ளே சொல்லியது.

மோதாசனார்

ஓரி - ஆண்பால் மயிர்

வாங்குநள் - வளைப்பாளாய்

ஏதின்மை - அயன்மை

சிறு செரு - சிறு சண்டை

பால் - ஊழ்

துணைமலர்ப் பிணையல் - உவமை

மணம் - களவு மணம்

இயற்கை - இயல்பு

நன்றி: http://tamil concordance.in