குறுந்தொகை: பாடல் 230

குறுந்தொகை 230 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

அம்ம வாழி, தோழி! கொண்கன்-

தான் அது துணிகுவன் அல்லன்; யான் என்

பேதைமையால் பெருந்தகை கெழுமி,

நோதகச் செய்தது ஒன்று உடையேன்கொல்லோ?-

வயச் சுறா வழங்கு நீர் அத்தம்

தவச் சில் நாளினன் வரவு அறியானே.

வலிதாகக் கூறிக் குறை நயப்பித்தது.

அறிவுடை நம்பி

அம்ம - இடைச்சொல் கேட்பித்தல்

வாழி - அசை நிலை

கொண்கன் - நெய்தல் தலைவன்

பேதைமை - அறியாமை

பெருந்தகை - பெருதகைமை, தகுதியுள்ளவன்,பெருமையுள்ளவன்

நோதக - துன்பம்,நோவு

வயச்சுறா - வலிய சுறா

நீர் அத்தம் - நீர் வழி