குறுந்தொகை: பாடல் 231
குறுந்தொகை 231 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்;
சேரி வரினும் ஆர முயங்கார்;
ஏதிலாளர் சுடலை போலக்
காணாக் கழிபமன்னே-நாண் அட்டு,
நல் அறிவு இழந்த காமம்
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே.
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ
சேரி - தெரு
ஆர முயங்குதல் - வேட்கை தீரத் தழுவுதல்
ஏதிலாளர் - அயலோர்
காணாக் கழிப - கண்டு செல்வார்
கலம் செய் கோவே, கலம் செய் கோவே (228:1,256:1)
மா இருந்தாழி (நற்றிணை 271:11)
மன்னர் மறைத்த தாழி (பதி.44:22)
தாழிய பெருங் காடு(புறம்.364:13)
-------------------------
கலம் செய்கோவே எனத் தொடங்கும் இரண்டு புறநானூற்றுப் பாடல்கள் உள்ளன.228 ஆவது பாடலைப் பாடியவர் ஐயூர் முடவன் ஆவார்;256 ஆவது பாடலைப் பாடியவர் பெயர் தெரியவில்லை.
நன்றி: http://tamil concordance.in
