குறுந்தொகை: பாடல் 232

குறுந்தொகை 232 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

உள்ளார்கொல்லோ?-தோழி!-உள்ளியும்,

வாய்ப் புணர்வு இன்மையின் வாரார்கொல்லோ?-

மரற்புகா அருந்திய மா எருத்து இரலை,

உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய

யாஅ வரி நிழல், துஞ்சும்

மா இருஞ் சோலை மலை இறந்தோரே.

பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.

ஊண்பித்தை

உள்ளுதல் - நினைத்தல்

கொல் - அசை நிலை

வாய்ப்புணர்வு - வினை முற்றும் இடம்

மரல் - பாம்புக் கத்தாழை/கற்றாழை

புகா - உணவு

எருத்து - பிடரி

யா - மரம்

இரலை - ஆண் மான்

வரி நிழல் - நிரம்பா நிழல்

மரல் நார் உடுக்கை (நற்.64:4)

...... மரல் புரி நரம்பின்/வில் யாழ் (பெரும்பாண்.181-182)

திரங்கு மரல் நார் (மலை.431)

வரி மரல் கரிக்கும் மடப் பிணை(அகம்.133:17)

வரி மரல் திரங்கிய கானம்(புறம்.370:10)

மரல் வகுந்து தொடுத்த செம் பூங் கண்ணி.. (புறம்.264:2)

-------------------------

http://tamil concordance.in