குறுந்தொகை: பாடல் 233
குறுந்தொகை 233 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன
கார் எதிர் புறவினதுவே-உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும்
வரைகோள் அறியாச் சொன்றி,
நிரை கோற் குறுந்தொடி தந்தை ஊரே.
பட்ட பின்றை வரையாது சென்று, வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
பேயன்
கவலை - கிழங்கு
கெண்டுதல் - கல்லுதல்,தோண்டுதல்
மூய் - மூடி
புறவு - முல்லை நிலம்
மிச்சில் - எஞ்சிய பொருள்
வரைகோள் - தடுத்தல்
சொன்றி - சோறு
குறுந்தொடி - அன்மொழித் தொகை,தலைவி
