குறுந்தொகை: பாடல் 234
குறுந்தொகை 234 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து,
எல்லுறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார், மயங்கியோரே:
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை;
பகலும் மாலை-துணை இலோர்க்கே.
பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
மிளைப்பெருங் கந்தன்
சுடர் - ஞாயிறு
எல் - ஒளி
என்மனார் - என்று கூறுவர்
குடுமி - சூட்டு, கொண்டை (உச்சிக்கொண்டை)
இயம்பும் - கூவும்
மன் - அசை நிலை
காலை அரும்பிப் பகல்எல்லாம் போதுஆகி
மாலை மலரும்இந் நோய் (குறள்.1227)
மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும்
வேலைநீ வாழி பொழுது (குறள் 1221)
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போ
