குறுந்தொகை: பாடல் 235
குறுந்தொகை 235 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
ஓம்புமதி; வாழியோ-வாடை!-பாம்பின்
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக்
கல் உயர் நண்ணியதுவே-நெல்லி
மரையினம் ஆரும் முன்றில்
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே.
வரையாது பிரிந்து வருவான் வாடைக்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது.
மாயேண்டன்.
ஓம்புமதி - முன்னிலை அசை
தூங்கு தோல் - தொங்குகின்ற தோல்
கடுக்கும் - ஒக்கும்
உயர் - உச்சி
நண்ணியதுவே - பொருந்தியது;ஏகாரம் - அசைநிலை(பிரிநிலை)
நெல்லி - (ஆகுபெயர்) நெல்லிக்காய்
குரம்பை - குடில்
.............புல் இலைப்/
பராரை நெல்லி அம் புளித் திரள் காய்/
கான மட மரைக் கணநிரை கவரும்(அகம்.69:6-8)
மை இல் பளிங்கின் அன்ன தோற்றப்/
பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி,/
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், (அகம்.399:13-15)
நெல்லி /மரை இனம் ஆரும் முன்றில்(குறுந்.235: 3-4)
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி(புறம்.170:1)
செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின்
அவ் வரி உரிவை அணவரும் மருங்கின்:(அகம்.327:12-13)
கல்பொருது இரங்கும் கதழ்வீழ் அருவி/
நிலம் கொள் பாம்பின் இழிதரும்/
விலங்குமலை நாடன்(குறுந்.134:5-7)
நன்றி: http://tamil concordance.in
