குறுந்தொகை: பாடல் 236
குறுந்தொகை 236 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ
நொந்தனை ஆயின், தந்தனை சென்மோ!-
குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும்
தண் கடற் சேர்ப்ப!-நீ உண்ட என் நலனே.
வரைவிடை வைத்துப் பிரிவான். ''இவள் வேறு படாமை ஆற்றுவி'' என்றாற்குத் தோழி நகையாடி உரைத்தது.
நரிவெரூஉத்தலையார்.
அன்றில் போலப்/புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை/ யானும் கற்றேன்(நற்றிணை 134:1-3)
