குறுந்தொகை: பாடல் 237

குறுந்தொகை 237 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇ,

நெஞ்சு நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய

கை பிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும்

சேய அம்ம, இருவாம் இடையே;

மாக் கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு,

கோட் புலி வழங்கும் சோலை

எனைத்து என்று எண்ணுகோ-முயக்கிடை மலைவே?

பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது

அள்ளூர் நன்முல்லையார்

அமர் துணை - விரும்புதற்குக் காரணமான துணை

தழீஇய - தழுவும்

பிரிந்தன்று - பிரிந்தது

கைபிணி - கையால் தழுவுதல்

நெகிழ்தல் - இல்லையாதல்

மலைவு - இடையூறு

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு(குறள்.1281)